பொகவந்தலாவ பகுதியை சேர்ந்த இருவர் ஐஸ் போதைப் பொருளுடன் நோர்வூட் பொலிசாரால் கைது.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் இடமிருந்து தலா 170 மில்லிகிராம் ஜஸ் எனும் போதைப் பொருள் கை பற்ற பட்டுள்ளது. அரச புலனாய்வுப் பிரிவினர் வழங்கிய தகவலுக்கு அமைய வீதி தடைகளை அமைத்து மேற்கொண்ட சோதனையின் போது முச்சக்கர வண்டியில் சென்ற சந்தேக பட்ட இருவரும் கைது செய்யப்பட்டதாக நோர்வூட் பொலிஸார் தெரிவிக்கிறார்கள்.அவ்வாறு கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து தலா 170 மில்லிகிராம் ஜஸ் எனும் போதைப் பொருள் கை பற்ற பட்டுள்ளது. பொகவந்தலாவ சிரிபுர பகுதியில் உள்ள இஸ்லாமிய இளைஞர் ஒருவர் பொகவந்தலாவ செப்பல் டன் பகுதியில் உள்ள தமிழ் இளைஞர் ஒருவர் அடங்கலாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டு உள்ளார்கள் என நோர்வூட் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மஸ்கெலியா நிருபர்.

What's Your Reaction?






