சட்ட விரோதமாக கசிப்பு தயாரித்த இருவர் கைது.
மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார விற்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவல்களை தொடர்ந்து நேற்று முன்தினம் சாமி மலை ஸ்ரஸ்ப்பி தோட்டம் மற்றும் அந்த தோட்டத்தில் உள்ள ஏனைய பிரதேசங்களில் பாரிய சுற்றிவளைப்பு மேற் கொண்ட போது சட்ட விரோதமாக கசிப்பு தயாரித்த இருவர் கைது செய்யப்பட்டு ஹட்டன் நீதி மன்றத்தில் ஆஜர் படுத்த பட்டனர். இவ்வாறு கைது செய்யப்பட்ட போது அவர்களிடம் இருந்து 95 லிட்டர் கோடா எனப்படும் திரவம் மற்றும் கசிபபு உற்பத்தி செய்யும் உபகரணங்கள் கை பற்ற பட்டது. நீதி மன்றத்தில் ஆஜர் படுத்த பட்ட வேலையில் குற்றவாளிகள் குற்றத்தை ஒப்புக் கொண்டு தலா 15000/= தண்டம் பணம் செலுத்த வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார். மஸ்கெலியா நிருபர்.

What's Your Reaction?






