குளவி கொட்டுக்குள்ளான 14 தொழிலாளர்கள் வைத்தியசாலையில்!

SaiSai
Sep 20, 2025 - 15:49
 0  19
குளவி கொட்டுக்குள்ளான 14 தொழிலாளர்கள் வைத்தியசாலையில்!

குளவி கொட்டுக்கு இலக்கான 14 தொழிலாளர்கள் பொகவந்தலாவ வைத்திய சாலையில்.

இன்று மதியம் பொகவந்தலாவ கொட்டியாகல தோட்ட கொட்டியாகல பிரிவில் தேயிலை கொழுந்து பரித்து கொண்டு இருந்த வேளையில் தேயிலை செடியின் கீழ் பகுதியில் இருந்த குளவி கலைந்து தேயிலை கொழுந்து பரித்து கொண்டு இருந்த 12 பெண்கள் இரண்டு ஆண்களை கொட்டியுள்ளது.

குளவி கொட்டுக்கு இலக்கான 14 தொழிலாளர்களும் பொகவந்தலாவ மாவட்ட வைத்திய சாலையில் அனுமதிக்க பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவ்வாறு குளவி கொட்டுக்கு இலக்கான வர்கள் 35 வயது தொடக்கம் 53 வயது உடையவர்கள் என்று பொதுவாக வைத்திய சாலையில் உள்ள அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இது குறித்து பொகவந்தலாவ பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மஸ்கெலியா நிருபர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow