இலங்கையில் ஐந்தில் ஒருவருக்கு மன நோய்?

SaiSai
Sep 30, 2025 - 22:45
Sep 30, 2025 - 22:46
 0  33
இலங்கையில் ஐந்தில் ஒருவருக்கு மன நோய்?

நாட்டிலுள்ள மக்களில் ஐந்தில் ஒருவருக்கு ஏதாவது ஒரு வகையான மனநோய் இருப்பதாக சிரேஷ்ட மனநல மருத்துவர் சஞ்சீவன அமரசிங்க தெரிவித்துள்ளார். 

கைத்தொலைபேசிகளுக்கு அடிமையாதல், கஞ்சா மற்றும் ஐஸ் பயன்பாடு போன்ற நிலைமைகளின் அதிகரிப்பு மனநோய்கள் அதிகரிப்பதற்கு வழிவகுத்துள்ளதாகவும், மதுவுக்கு அதிக நாட்டம் கொண்டவர்களும் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் மேலும் தெரிவித்தார்.

 

 நாட்டில் பதிவான தற்கொலைகளில் 50 சதவீதம் மனநோய்களால் ஏற்படுவதாகத் தெரியவந்துள்ளது. ஒவ்வொரு நாளும் 8 பேர் தற்கொலை செய்து கொள்வதாகவும் இது வருடத்திற்கு சுமார் 3200 ஆகக் காணப்படுவதாகவும் தெரிவித்தார். 

 

பெரும்பாலான இளைஞர்கள் மனச்சோர்வு எனப்படும் பெரிய மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தேசிய மனநல நிறுவனத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் அவர் இந்த உண்மைகளை வெளிப்படுத்தினார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow