அரசு நியமனங்களை தமிழர்கள் செறிந்து வாழும் பகுதிக்கும் கொண்டு வாருங்கள்

13.08.2025 "அரச நிறுவனங்களில் சுமார் 62 ஆயிரம் வெற்றிடங்களை நிரப்புவதற்கான நியமன அனுமதியை அமைச்சரவையில் அதிமேதகு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கா அவர்கள் பெற்றிருக்கின்ற இந்தவேலையில், இந்த நியமன அனுமதி நுவரெலியா மாவட்டத்திற்கு மற்றும் தமிழர்கள் செறிந்து வாழுகின்ற பகுதிகளுக்கு எந்த அளவு பக்க பலமாக அமையப் போகிறது என்பது எதிர்கால நடவடிக்கையை பொறுத்தே நாங்கள் பார்க்க முடியும்! - சச்சிதானந்தன்" இது தொடர்பாக இ.தொ.கா உபத்தலைவர் திரு.சச்சிதாணந்தன் அவர்கள் மேலும் தெரிவிக்கையில்.... இன்றைய சூழலில் அரச நிறுவனங்களில் சுமார் 62 ஆயிரம் வெற்றிடங்களை நிரப்புவதற்கான நியமன அனுமதியை அமைச்சரவையில் அதிமேதகு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கா அவர்கள் பெற்றிருக்கின்றார் மிக வரவேற்கத்தக்க விடயமாக பார்க்கப்படுகின்ற இந்த நியமன அனுமதி நுவரெலியா மாவட்டத்திற்கு மற்றும் தமிழர்கள் செறிந்து வாழுகின்ற பகுதிகளுக்கு எந்த அளவு பக்க பலமாக அமையப் போகிறது என்பது எதிர்கால நடவடிக்கையை பொறுத்தே நாங்கள் பார்க்க முடியும். இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவவர் அமரர் ஆறுமுகம் தொண்டமான் ஐயா அவர்களது காலப்பகுதியின் ஆசிரியர் நியமனங்கள் அரச ஊழியர்களுக்கான அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் நியமனங்கள் பெற்றுக்கொடுக்கப்பட்டது. மேலும் மத்திய மாகாண முன்னாள் மாகாண கல்வி அமைச்சர் கௌரவத்துக்குரிய மருதபாண்டி ராமேஸ்வரன் அவர்களது காலப்பகுதியில் பட்டதாரி ஆசிரியர்களுக்கான நியமனங்கள் இறுதியாக தனது பாராளுமன்ற காலப்பகுதியிலும் மலையகத்துக்கான 740 பட்டதாரி ஆசிரியர்களுக்கான நியமனங்களையும் பெற்றுக் கொடுத்திருந்தார. இதைத் தவிர்த்து பார்க்கின்ற போது வேறு எந்த காலப்பகுதியிலும் அரசு நியமனங்கள் வேறு நிறுவனங்களின் நியமனங்கள் என்பவற்றை வேறு யாரும் பெற்றுக் கொடுத்ததாக தெரியவில்லை. தற்போதைய அரசு எல்லா வழிகளிலும் பாகுபாடற்ற நல்ல நிர்வாகத்தை நடத்துவதற்கான செயற்பாடுகளை செய்வதாக கூறி வருகின்ற இந்த நிலையில் கிடைத்திருக்கின்ற இந்த மிகப்பெரிய வாய்ப்பில் சிறுபான்மை சமூகத்துக்கு சரியான சந்தர்ப்பங்களை அவர்களது தகுதியின் அடிப்படையில் வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம். என்னில் அடங்காத அரச ஊழியர்கள் ஓய்வு பெறுகின்ற இந்த நிலையில் கிடைத்திருக்கின்ற இந்த நியமன வாய்ப்பு புதிய இளைய சமூகத்துக்கும் படித்த பட்டதாரிகள் தொழிலற்று போராடக் கூடிய நிலையை இல்லாது ஒலிக்கவும் மிகவும் பயனாக இருக்கும் என நினைக்கின்றேன். எனவே மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற ஆளும்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் இது சம்பந்தமாக வலியுறுத்தி அழுத்தம் கொடுக்குமாறு மிக வினையமாக கேட்டுக்கொள்கின்றேன். இந்த சந்தர்ப்பத்தை விட்டு விட்டால் இன்னும் ஒரு 55 வருட காலத்துக்கு 62 ஆயிரம் நியமன வாய்ப்பில் விகிதாசார அடிப்படையில் பார்த்தாலும் கூட சிறுபான்மை இனத்துக்கு சுமார் 23 ஆயிரம் நியமன வாய்ப்புகள் இல்லாது போய்விடும் என்றே கூறவேண்டும். ஆகவே இதனை கவனத்தில் கொண்டு இன்றைய அரசுக்கு மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என அங்கீகாரத்தைப் பெற்ற மலையக பாராளுமன்ற உறுப்பினர்கள் இதை வலியுறுத்த வேண்டும் எனவும் கேட்டுக் கொள்வதோடு, இதற்கு முன்னர் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கிடைத்த அவ்வளவு சந்தர்ப்பங்களிலும் அமரர் சௌமியமூர்த்தி தொண்டன் ஐயா அன்று கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சையில் மூன்று பாடங்கள் சித்திப்பெற்றவர்களுக்கு அரசோடு பேரம் பேசி நியமனங்களை பெற்றுக் கொடுத்தார். அதன் பின்னால் அரசோடு இருந்த சந்தர்ப்பங்களில் எல்லாம் இணைந்து பணியாற்ற முடிந்த சந்தர்ப்பங்களில் எல்லாம் பல்வேறு நியமனங்களை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஊடாக அரசுக்கு அழுத்தம் கொடுத்து பெற்றுக் கொடுக்கப்பட்டது. இப்போது இருக்கின்ற தொழிலற்ற கணிசமான படித்த இளைஞர் யுவதிகளுக்கு அவர்களது எதிர்கால நலன் கருதி இந்த வாய்ப்பினை பெற்றுக் கொடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன் என சச்சிதாணந்தன் கேட்டுக்கொண்டார்.

Aug 13, 2025 - 17:13
Aug 14, 2025 - 10:08
 0  12
அரசு நியமனங்களை தமிழர்கள் செறிந்து வாழும் பகுதிக்கும் கொண்டு வாருங்கள்

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow