வட்டி பணத்தை மீள் செலுத்த முடியாமல் தாதி ஒருவர் எடுத்த தவறான முடிவு!

SaiSai
Nov 13, 2025 - 15:33
Nov 13, 2025 - 15:34
 0  15
வட்டி பணத்தை மீள் செலுத்த முடியாமல் தாதி ஒருவர் எடுத்த தவறான முடிவு!

வட்டி பணத்தை மீள் செலுத்த முடியாமல் தாதியொருவர் எடுத்த தவறான முடிவு..!

10ஆயிரம் வட்டிக்கு வாங்கிய நிலையில் அது 28ஆயிரமாக அதிகரித்துள்ளது, வட்டி பணத்தை மீள் செலுத்த முடியாமல் தாதியொருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளனர்.

'ஒன்லைன் கடன் செயலி' (Online Loan App) ஒன்றின் கொடூரமான மிரட்டல் காரணமாக ஹிமாயா செவ்வந்தி அவர்கள் எடுத்த துயரமான முடிவு, நம் சமூகத்தையே உலுக்கியுள்ளது.

????????நடந்தது இதுதான்:

????அவர் ஒரு செயலி மூலம் ரூ. 10,000 என்ற சிறிய தொகையைக் கடனாகப் பெற்றுள்ளார். ஆனால், "மீற்றர் வட்டி" என்ற கொடூரப் பொறியில் அவர் சிக்கியுள்ளார்.

????பணம் செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டபோது, அந்தச் சட்டவிரோத App நிறுவனம், மிகக் கேவலமான வழிகளில் மிரட்டத் தொடங்கியுள்ளது:

????அவரது தொலைபேசியில் இருந்த அனைத்து நண்பர்கள், உறவினர்களின் எண்களுக்கும் (Contacts) அவதூறான செய்திகளை அனுப்பியுள்ளனர்.

????அவரது புகைப்படங்களை மார்பிங் (Morphing) செய்து, சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதாக மிரட்டியுள்ளனர்.

????தொடர்ச்சியான மிரட்டல்கள் மற்றும் சமூக அவமானத்தால் ஏற்பட்ட மன அழுத்தமே இந்தத் துயரத்திற்குக் காரணம் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

⚠️ பொதுமக்களுக்கு ஒரு அவசர எச்சரிக்கை! ⚠️

இந்த 'Online Loan Apps' என்பவை வங்கிகள் அல்ல. அவை ஆபத்தான குற்றப் பொறிகள்..!

1. தகவல் திருட்டு: நீங்கள் App-ஐ Install செய்யும்போதே, உங்கள் Photos, Contacts என அனைத்தையும் அவர்கள் திருடி விடுகிறார்கள்.

2. கொடூர வட்டி: 100% முதல் 500% வரை வட்டி என்ற பெயரில் கொள்ளையடிக்கிறார்கள்.

3. மிரட்டல் (Blackmail): உங்கள் தனிப்பட்ட தகவல்களை வைத்தே உங்களையும் உங்கள் குடும்பத்தையும் மிரட்டுகிறார்கள்.

???? நீங்கள் அல்லது உங்கள் நண்பர்கள் சிக்கியிருந்தால் என்ன செய்வது? ????

1. பயப்படாதீர்கள்: மிரட்டலுக்குப் பயந்து, மேலும் பணம் கட்ட வேண்டாம்.

2. புகார் அளியுங்கள்: உடனடியாக உங்கள் பகுதி காவல்துறை (Police) அல்லது குற்றப் புலனாய்வுத் துறையில் (CID / Cyber Crime) புகார் அளியுங்கள்.

3. உண்மையைச் சொல்லுங்கள்: உங்கள் நண்பர்களுக்கு இதுபோல அழைப்புகள் வந்தால், நீங்கள் ஒரு 'சைபர்' குற்றத்தில் சிக்கியுள்ளீர்கள் என்பதை அவர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.

மன அழுத்தம் ஏற்பட்டால், தயவுசெய்து தனியாக இருக்க வேண்டாம். உடனடியாக உதவி பெறுங்கள்:

• ???? தேசிய மனநல உதவி எண் (இலங்கை): 1926

• ???? சுமித்திரயோ (Sumithrayo): 011 2692909

தயவுசெய்து இந்தப் பதிவைப் பகிருங்கள். இது போன்ற ஆபத்தான செயலிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவோம். இன்

இன்னொரு துயரம் நடப்பதைத் தடுப்போம். (copied)

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow